Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்களிக்க முடியாமல் தவிக்கும் ரோபோ சங்கர்: காரணம் என்ன?

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (14:21 IST)
வாக்களிப்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்த நடிகர் ரோபோ சங்கர் வாக்களிக்க முடியாமல்  திரும்பிச் சென்றார்.
தமிழகம், புதுவை உள்பட 97 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் விஐபிக்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 
 
தமிழகத்தை பொறுத்தவரையில் தற்போது 1 மணி நிலவரப்படி 38 மக்களைவை தொகுதிகளில் 39.49 சதவீதமும்  18 சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை 1 மணி நிலவரப்படி 42.92 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளியில்  காலை 6.30 மணிக்கே வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லாததால் என்ன செய்வது என தெரியாமல் நின்றுகொண்டிருந்தார். இது குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டபோதும் எந்த ரெஸ்பான்ஸும் இல்லையாம். இதனால் அவர் நீண்ட நேரம் காத்திருந்தும் வாக்களிக்க முடியாமல் சென்றார். ஆனால் மாலைக்குள் எப்படியாவது ஓட்டு போட்டே தீருவேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் முக்கிய தடுப்பூசி.. அரசின் அதிரடி முடிவு..!

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள்யின் முதல் புகைப்படம்.. பரபரப்பு தகவல்..!

நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை: கொலையான மஹ்தியின் சகோதரர் கருத்து..!

சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென பரவும் காட்டுத்தீ- பக்தர்கள் செல்ல தடை

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments