Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரைமுருகன் வீட்டில் ரெய்டு ஏன் ? –பொங்கியெழும் பொன்னார் !

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2019 (08:04 IST)
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்துள்ள வருமான வரி சோதனைக் குறித்து பாஜக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மார்ச் 30 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல்   8:30 வரை வருமான வரி சோதனை நடைபெற்றது. சோதனை முடிவடைந்ததை அடுத்து துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து நீண்ட விளக்கம் கொடுத்தார். அதில் ’என் மகன் கதிர் ஆனந்தின் தேர்தல் வெற்றியை திசை திருப்பவே இந்த ஐடி சோதனை’ என்றார். இந்த சோதனையில் ரூ.10 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை துரை முருகன் மறுத்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் வேளையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, வருமான வரித்துறை அதிகாரிகளின் உதவியுடன் எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி பழிவாங்கும் போக்கில் நடந்து வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் தோல்வி பயத்தாலேயே பாஜக அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாஜக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பியபோது ‘அவர்கள் பணத்தை குவித்து வைத்து விநியோகம் செய்வார்கள். அதைத் தடுத்தால் தேர்தல் தோல்வி பயம் என்று கூறுவார்கள். அவர்கள் பணப்பட்டுவாடா பண்ணும் போது அதைத் தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. என் தொகுதியான கன்னியாகுமரியிலும் அவர்கள் வாக்குக்குப் பணம் கொடுத்து வருகிறார்கள். அதனால் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments