Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஒன்னும் அவ்ளோ வொர்த் பீஸ் இல்ல... சரண்டரான ஓபிஎஸ்

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (15:10 IST)
தேர்தல் நெருங்கியுள்ளதால், வெயிலின் அனலோடு, அனல் பறக்கும் பிரச்சாரங்களை அரசியல் கட்சி தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 
அந்த வகையில் ராமநாதபுரம் மக்களவை வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். எந்த கொம்பனாலும் அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என அதிமுகவின் பெருமைகளையும் அதிமுக செய்த சாதனைகளை மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.
 
அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் ஜல்லிக்கட்டு நாயகனே என கோஷமிடத்துவங்கினர். இதை கேட்டதும், ஓபிஎஸ் தொண்டர்களை பார்த்து, நீங்கள் ஜல்லிக்கட்டு நாயகனே என சொல்லிவிட்டு சென்று விடுவீர்கள். 
 
அதன் பிறகு நான் எங்காவது ஜல்லிக்டட்டி துவங்கி வைக்க செல்லும் போது என்னை காளையை அடக்க சொன்னா, என் நிலைமை என்னவாகும் என கலகலப்பாக பதில் அளித்தார்.  ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த சமயத்தில்தான், ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரு பெண்கள் முடியை பிடித்து இழுத்து சண்டை.! விசில் அடித்து உற்சாகப்படுத்திய ஆண்கள்..!

இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கிய அமைச்சர்.. மகனுக்கு பரிசளிப்பு..!

500 நிறுவனங்கள் நிராகரிப்பு.. மாதம் ரூ.20 லட்சத்தில் வேலை பெற்ற 23 வயது இளைஞர்..!

3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இந்தியா மற்றும் ரஷ்யாவை இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments