Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுக்கே நீதி கிடைக்கவில்லை, மக்களுக்கு எப்படி கிடைக்கும்? கமல் கட்சி குறித்து குமரவேல்

Webdunia
வியாழன், 28 மார்ச் 2019 (20:03 IST)
கமல் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய குமரவேல், அக்கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 
அந்த பேட்டியில், கமல் கட்சியில் மூன்று பேர் அதிகாரமிக்கவர்களாக உள்ளதாகவும், அவர்கள் எடுப்பதே முடிவு என்றும், எந்த முடிவும் யாருடனும் கலந்து ஆலோசித்து எடுப்பதில்லை என்றும் முடிவெடுத்தவுடன் எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் வரும் என்றும் கூறினார்.
 
மேலும் கமலிடம் அகந்தையோ, அதிகார நோக்கமோ இல்லை என்றாலும் அவர் ஒரு குறிப்பிட்ட வளையத்திற்குள் மட்டுமே இருப்பதால் இந்த கட்சியை அவரையும் மீறி ஒரு அதிகார வர்க்கம் நடத்துவது போல் தெரிகிறது. நான் போட்டியிடுகிறேன் என்று கூறியதும், அனைத்து வேலையையும் கவனியுங்கள் என்று கமல் சொன்னதால்தான் நான் தேர்தல் பணிகளை தொடங்கினேன். ஆனால் அதையே காரணம் காட்டி என்னை கட்சியில் இருந்து நீக்க முடிவெடுத்தனர். கட்சிக்குள் இருக்கும் எனக்கே நீதி கிடைக்காதபோது மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும். 
 
மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள் நன்றாக இருந்தாலும், அந்த கொள்கைகளை முறைப்படி செயல்படுத்த அங்கு ஆளில்லை என்று குமரவேல் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments