Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடுகளவாச்சும் சூடு சொரண இருக்கா..? அன்புமணியை நாரடித்த அழகிரி

Webdunia
புதன், 17 ஏப்ரல் 2019 (14:42 IST)
நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி திட்டுக்கொள்கின்றனர். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, அன்புமணியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.  
 
அவர் கூறியதாவது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக அன்புமணி தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். 
 
ராகுல் இப்படி பேசியதாக கூறப்படுகிற அவதூறு பேச்சுக்கு அன்புமணி ஆதாரங்களை காட்டுவாரா? மற்றவர்களுக்கு சூடு சொரணை இருக்கிறதா என கேட்கிற அன்புமணிக்கு, அது கடுகளவாவது இருக்குமேயானால் ராகுல் பேசாத பேச்சிற்கு ஆதாரம் கட்ட வேண்டும்.
இப்படி எல்லம் பேசி தமிழக் மக்களை ஏமாற்றலாம் என நினைத்தால் அது பகல் கனவாகதான் முடியும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை  அமைச்சர் நிதின் கட்கரி கட்டுப்பாட்டில் இருக்கிற மத்திய நீர்வள ஆணையம்தான் கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்தது. இதற்கு துணை போனது பாஜக அரசு என்பதை அன்புமணியால் மறுக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments