நான் கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றவில்லை - மோடி

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (15:40 IST)
வரும் மக்களவைத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் அரசமைப்பது பாஜகவா இல்லை காங்கிரஸா என்ற பல்வேறு கட்ட கேள்விகள் நாள்தோறும் மக்கள் மனதில் எழுந்துவருகின்றன.
இந்நிலையில் பீகார் மாநிலம் ஜமியூ  பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார் மோடி.
 
அவர் கூறியதாவது:
 
கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்தது. அப்போது அவர்கள் செய்யாத பணியை அடுத்து அவர்கள் ஆட்சிக்கு வந்தால் செய்ய முடியுமா ? என்று கேள்வி எழுப்பினார்.
 
மேலும் நான் வக்குறுதி அளித்த அனைத்தையும் நிறைவேற்றவில்லை. அதனால் நிறைவேற்ற வேண்டிய பணிகள் நிறையவுள்ளன.
 
பாகிஸ்தானின் செய்தித்தொடர்பாளர் போல காங்கிரஸ் கட்சி நமது ராணுவ நடவடிக்கைக்கு ஆதாரம் கேட்டு  முப்படையினரை அவமானப்படுத்துகின்றனர்.
 
காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போதுதான் பொருளாதாரம் பின்னோக்கிச் செல்கிறது. தீவிரவாதம், வன்முறை, கருப்பு பணம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் அதிகமாக இருந்தன’ இவ்வாறு மோடி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments