பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு ஜாக்சனின் தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார்.
இன்னும் ஜான்சனின் உடல் அடக்கம் செய்யப்படவில்லை என்றும், எப்போது அடக்கம் செய்யப்பட உள்ளது என்பதை தெரிவிக்கவும் அவர் மறுத்துவிட்டார்.
மைக்கேல் ஜாக்சன் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் கடந்த 6-ந் தேதி பாரஸ்ட் லான் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ஆனால் மைக்கேல் ஜாக்சன் உடல் இன்னும் அடக்கம் செய்யப்படவில்லை என்று மைக்கேலின் தந்தை ஜோ கூறினார். ஜாக்சன் இறந்து விட்டார் என்பதையே என்னால் இன்னும் நம்பமுடியவில்லை என்றும் அவர் கூறினார்.
அவர் உடல் எப்போது எங்கு அடக்கம் செய்யப்படும் என்று கேட்டபோது அவர் எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டார். லாஸ்வேகாஸ் நகரில் உள்ள நெவர்லாண்டு தோட்டத்தில் மைக்கேல் ஜாக்சனுக்கு கோயில் கட்டப்போவதாகவும் ஜோ தெரிவித்தார்.