சமீபத்தில் வெளியான பிரமாண்டமான படத்தில் ராஜமாதாவாக நடித்திருந்தவர் அந்த நடிகை. இயக்குநரான அவருடைய கணவர் ஹைதராபாத்தில் வசித்துவர, நடிகையோ மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார். இதனால், இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று யாரோ கொளுத்திப் போட்டுவிட, பதறிவிட்டார் ராஜமாதா.
‘படங்கள் மற்றும் சீரியல்களில் நடிப்பதற்கு வசதியாக நான் இங்கு இருக்கிறேன். பட வேலைகளில் பிஸியாக இருக்கும் என் கணவர் அங்கு இருக்கிறார். எனக்கு நேரம் கிடைக்கும்போது நான் ஹைதராபாத் சென்று விடுவேன். அவருக்கு நேரம் கிடைக்கும்போது இங்கு வருவார். இரண்டு பேரும் ஃப்ரீயாக இருந்தால் சுற்றுலா கிளம்பிவிடுவோம்’ என்று ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார் ராஜமாதா.