ட்விட்டரில் சீறிய வம்பு நடிகர்

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2017 (15:51 IST)
தன்னுடைய அடுத்த படம் பற்றி பொய்யான தகவலை எழுத வேண்டாம் என ட்விட்டரில் சீறியுள்ளார் வம்பு நடிகர்.



 
மலையாள தேச இயக்குனர் இயக்கத்தில் வம்பு நடித்து வெளியான மூணு ‘ஏ’ படம் படுமொக்கையாக இருந்ததால், வம்புவையும், ஆதிக்கையும் கழுவி ஊற்றினர் ரசிகர்கள். இனிமேல் வம்புவை வைத்து யாரும் படம் தயாரிக்க முன்வர மாட்டார்கள் என்கிற அளவுக்கு இருந்தது அந்தப் படம். எனவே, வம்புவின் அடுத்த படம் குறித்து ஏகப்பட்ட யூகங்கள் வெளியாகின.

முதலாவது, நடிப்பதை நிறுத்திவிட்டு வேறொரு நடிகரை வைத்து இயக்கப் போகிறார். இரண்டாவது, பாதியில் கைவிடப்பட்ட ‘கெட்டவன்’ படத்தை தூசி தட்டி மறுபடியும் இயக்குகிறார். மூன்றாவது, ‘பில்லா 3’ படத்தில் நடிக்கிறார். இவை தவிர்த்து, இன்னும் சில தகவல்களும் உலாவிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், “மீடியாக்களுக்கு தாழ்மையான வேண்டுகோள். யூகத்தின் அடிப்படையில் என்னுடைய அடுத்த படம் பற்றிய எந்த செய்தியையும் எழுத வேண்டாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள். உங்கள் ஆதரவிற்கு நன்றி” என ட்விட்டரில் பொங்கியுள்ளார் வம்பு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.1,000 கோடி வசூலை நெருங்கும் 'துரந்தர்' 2.. ஆனால் கணவருக்கு வாழ்த்து சொல்லாத தீபிகா படுகோன்.!

விஜய் ஏன் கருப்பு படத்தில் நடிக்கவில்லை!.. ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்!...

பாக்ஸ் ஆபிசில் பண மழை கொட்டுது!.. துரந்தர் 2 மூணு நாள் வசூல் நிலவரம்..

தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. தேனிலவு புகைப்படங்கள் வைரல்..!

கரூரில் ஷூட்டிங்கா?!. கடுப்பான ஹெச்.வினோத்!.. விஜய் சொன்ன அட்வைஸ்!..

அடுத்த கட்டுரையில்
Show comments