Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதற்கு தான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதேயில்லை - மனம் திறந்த ஸ்டார் நடிகை

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (11:24 IST)
கோலிவுட்டின் உச்ச நடிகையான அந்த மூன்றெழுத்து நடிகை பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தொடர் வெற்றிகளை குவித்து ஸ்டார் நடிகையாக வலம் வருகிறார். ஆனால், இவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். 


 
தற்போது தமிழ் சினிமாவில் மாஸ் நடிகருடன் நடித்து வருகிறார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான டோலிவுட் படமொன்று நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார், தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் என பல பிரபலங்கள் சேர்ந்து நடித்திருந்த இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 
அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட அந்த நடிகை பங்கேற்கவில்லை. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் நடிகை பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மறுத்து வருகிறார் என தொடர்ந்து கேள்வி கேட்டு வந்த நிலையில் தற்போது முதன் முறையாக மனம் திறந்துள்ளார் ஸ்டார் நடிகை, "நான் என்ன நினைக்கிறேன் என்பதை இந்த உலகம் தெரிந்துகொள்ள வேண்டாம் என நினைக்கிறேன். நான் தனிமையை விரும்பும் ஒருவர். கூட்டம் என்றால் எனக்கு சமாளிப்பது கடினம். பல சமயங்களில் நான் பேசியதை தவறாக மாற்றி சித்தரித்துவிடுகிறார்கள். அதனால் வரும் சிக்கல்களை சமாளிப்பது கடினமாக உள்ளது. என்னுடைய வேலை நடிப்பது மட்டும் தான். மற்றதை என் படங்களே பேசும், என்று அவ்வளவு துணிச்சலாக பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார் அந்த மூன்றெழுத்து நடிகை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தங்க நிற உடையில் சிலை போல ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… ரீசண்ட் க்ளிக்ஸ்!

கேப்டன் பிரபாகரன் ரி ரிலீஸ்… விஜயகாந்தைத் திரையில் பார்த்ததும் கண்ணீர் விட்ட பிரேமலதா!

கூலி படத்தில் என் வேலை அதுமட்டும்தான்… எனக்கு எந்த வருத்தமும் இல்லை –அமீர்கான்!

தீபாவளிக்கு ப்ரதீப்பின் இரண்டு படங்கள் ரிலீஸா? … LIK படத்துக்கு விட்டுக் கொடுக்காத ட்யூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments