Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்னல் வேக விற்பனை; குற்றச்சாட்டுக்கு விளக்கம் கொடுத்த சியோமி

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (14:56 IST)
சியோமி நிறுவனத்தின் மீது ஸ்மார்ட்போன் விற்பனை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

 
சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலம்தான் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலே ஸ்மார்ட்போன்கள் விற்று தீர்ந்து விடுகிறது. மின்னல் வேகத்தில் லட்ச கணக்கில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகிவிடுகிறது.
 
விற்பனை நாளன்று விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையை அந்நிறுவனம் வெளியிடுவது வழக்கம். இதற்கு மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் உள்பட பலரும், சியோமி நிறுவனம் விற்பனையை அதிகரிக்க போலியான டிமெண்டை உருவாக்கி வருகிறது என்று குற்றம்சாட்டினர்.
 
இந்த குற்றச்சாட்டை சியோமி நிறுவனம் முற்றிலும் மறுத்து வருகிறது. அதற்கான விளகத்தையும் கொடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய சியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனுகுமார் ஜெயின் கூறியதாவது:-
 
அதிகப்படியான தேவை இருக்குமென்றால் அதைச்  சமாளிக்க முன்கூட்டியே அதிக அளவில் போன்களை தயாரித்து வைக்கலாமே என்று பலர் எங்களிடம் கேட்கிறார்கள். சரிதான். ஆனால், அவை விற்காமல் போனால் அந்த நஷ்டத்தை யார் ஏற்றுக்கொள்வார்கள் 
 
தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களை ஸ்டாக் வைப்பதில்லை. ஒவ்வொரு வாரமும் தயாரிக்கப்படும் போன்கள் அடுத்த வாரமே விற்பனை செய்யப்பட்டு விடுகின்றன என்று கூறியுள்ளார்.
 
மேலும் IDC அறிக்கையில் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மில்லியன் கணக்கில் விற்பனை செய்யப்பட்டது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments