Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிகச்சிறிய மொபைல் போன் அறிமுகம்: இரண்டு நாணயங்கள் அளவே இருப்பதால் ஆச்சரியம்

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (01:00 IST)
கடந்த சில மாதங்களாக பெரிய சைஸ் போன் வைத்து கொள்வதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். வீடியோ சேட்டிங் போதும், திரைப்படங்கள் உள்பட வீடியோ பார்க்கும்வகையில் பெரிய ஸ்க்ரீன் சைஸ் போன்கள் விரும்பி வாங்கப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் ஜான்கோ நிறுவனம் உலகின் மிகச்சிறிய மொபைல் போனை அறிவித்துள்ளது. இந்த போன் 1.9 x 0.8 x 0.5 இன்ச் அள்வே இருக்கின்றது. அதாவது இந்த இரண்டு நாணயங்கள் அளவில் மட்டும் உள்ளது என்பதும் இந்த போனின் ஸ்க்ரீன் சைஸ் வெறும் 0.49 இன்ச் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த போனில் அழைப்புகள் மற்றும் மெசேஜ் ஆகியவற்றுக்காக மட்டும் பயன்படுத்தப்படும். 200-mAh பேட்டரியை கொண்ட இந்த போன் 180 நிமிடங்கள் தொடர்ந்து பேசும் வகையில் பேட்டரியின் திறன் இருக்கும். இந்த போனின் எடை வெறும் 13 கிராம் மட்டுமே. மினி கீபேட் கொண்ட இந்த போன் 2Gயில் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments