Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகா சிவராத்திரி முன்னிட்டு பங்குசந்தைக்கு இன்று விடுமுறை

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (12:38 IST)
மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பங்குகள், அந்நிய செலாவணி, பணம் மற்றும் கமாடிட்டி  சந்தைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இந்துக்களால் மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாப்படும். அன்று சிவனுக்காக விரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்வார்கள். அடுத்தநாள்  காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன்  உணவருந்தி விரதத்தை நிறைவு செய்வார்கள்.
 
தமிழகத்தில் கூட கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழாவுக்காக சிறப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் மகா சிவராத்திரி என்பதால் வட இந்தியா முழுவதும் விடுமுறை அறிவிக்கப்ப்ட்டுள்ளது. இதனால் பங்கு சந்தை, அந்நியச் செலாவணி வர்த்தகம்  இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்து டிக்கெட் Payement Fail ஆனால் அரை மணி நேரத்தில் பணம் ரிட்டர்ன்! - போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு!

நான் மோசடி செய்துட்டு ஓடினேனா? என்ன நடந்தது தெரியுமா? - முதல்முறையாக மனம் திறந்த மல்லைய்யா!

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments