Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய்க்கு நிகரான நிமிடங்கள்: ஏர்டெல் அதிரடி!!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2016 (12:07 IST)
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், வாலட் மற்றும் ஏர்டெல்​ மணி (Airtel Money) சேவைகளை தொடர்ந்து, தற்போது பேமண்ட் வங்கிச்​ சேவையிலும் ஈடுபட்டுள்ளது.


 
 
ஏர்டெல் பேமண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு மற்றும் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்திற்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்படடுள்ளது.
 
இந்நிலையில், ஏர்டெல் பேமண்ட் வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு திறக்கும் ஏர்டெல் சந்தாதாரருக்கு, டெபாசிட் செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கு நிகரான நிமிடங்களுக்கு டாக்டைம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
 
அதாவது ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கியின் சேவிங்ஸ் அக்கவுண்டில் ரூ.500/- டெபாசிட் செய்தால் ஏர்டெல் தொலைபேசி எண்ணிற்கு 500 நிமிடங்க்ளுக்கான டாக்டைம் கிடைக்கும்.
 
இதை கொண்டு இந்தியா முழுவதும் உள்ள எந்த எண்ணிற்கும் அழைக்கலாம். எனினும், இந்த நன்மை வங்கியில் முதல் முறையாக டெபாசிட் செய்பவர்களுக்கு மட்டுமே.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments