Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக வலைதளம் பயனாளர்களுக்கு வந்த சிக்கல் - ஆய்வில் தகவல்

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (19:23 IST)
இன்றைய உலகமே செல்போனுக்குள்  சுறுங்கிவிட்டது. அதிலும் சமூக வலைதளங்கள் இன்றைய இளசுகள் காட்டும் ஆர்வம் முந்தைய தலைமுறையினரையே பொறாமை கொள்ளச் செய்யும் விதத்திற்கு கொண்டு செல்லுகிறது.
ஆனால் இந்த ஃபேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பயனர்  விவரங்களை எல்லாம் நிரந்தரமாக அழிக்க முடியாது என்ற தகவல் தெரிவிக்கின்றன.
 
இந்த பிரபலமான சமூகவலைதளங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் விளம்பரஙகளும் கட்சி பிரசாரங்களும் கூட செய்யப்படுகின்றன.
 
அதேசமயம் இந்த சமூக வலைதளத்தில் தனிப்பட்ட ரகசியம் எதையும் பாதுகாக்க முடியாத சூழலும் நிலவுகிறது. இதனால் ரகசிய குறியீடுகளைப் பயன்படுத்தி பல தகவல் திருட்டு நடைபெறுகிறது.
 
இதனையடுத்து பலர் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் வலைதள கணக்கில் இருந்து விலகினார்கள்.இதில் என்ன சிக்கல் என்றால் ஃபேஸ்புக்கில் இருந்து ஒருவர் விலகினாலும் அவரது அவரது தகவல்களை அழிக்கமுடியாது என்று அமெரிக்காவில் வெர்மாண்ட் பல்கலைக்கழகமும் , ஆஸ்திரேலியாவின் அடிலெட்டு பல்கலைக்கழகமும் இணைந்து தீவிர ஆய்வு மேற்கொண்ட பின்னர் இந்த தகவலை கூறியுள்ளன.
 
இந்த ஆராய்ச்சியின் முடிகளில் திட்டமாய்ச் சொல்வது என்னவென்றால் யார் ஒருவர் ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கத்தில் இருந்து விலகினாலும் அவர்களின் தகவலை மீண்டும் பெறமுடியும் என்பதே ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments