Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைந்து போன இந்திய விண்கலம் நிலைவை சுற்றி வருகிறது: நாசா தகவல்

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (19:10 IST)
2009 ஆம் ஆண்டு தொலைந்து போனதாக கருத்தபட்ட இந்தியாவின் முதல் நிலவு ஆய்வு விண்கலம் நிலவை சுற்றி வருவதை நாசா கண்டறிந்து உள்ளது. 


 

 
இந்திய விண்வெளித்துறை நிலாவை ஆராய்வதற்கு முதன்முதலாக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி விண்ணில் ஏவியது. இதையடுத்து 2009ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதி முதல் சந்திராயன்-1 விண்கலத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அந்த விண்கலம் தொலைந்து விட்டதாக கருதியது.
 
இந்நிலையில் தற்போது சந்திராயன்-1 விண்கலம் தொலைந்து போகவில்லை என நாசா தெரிவித்துள்ளது. மேலும் சந்திராயன்-1 விண்கலம் சந்திர மேற்பரப்புக்கு 200 கி.மீ தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விதிக்கப்பட்ட சுற்றுப்பாதையை கடந்து வேறு சுற்றுப் பாதையில் விண்கலம் சுற்றினால் அதனுடன் தொடர்பு கொள்வது இயலாமல் போகலாம். இஸ்ரோ சந்திராயன்-1 விண்கலத்துடன் தொடர்பை இழந்தத்தற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பதிவு..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு.. முழு விவரங்கள்..!

நாடு சுதந்திரம் ஆன பின்னர் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவர்.. உபி கிராமத்தில் அதிசயம்..!

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

அடுத்த கட்டுரையில்
Show comments