Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைந்து போன இந்திய விண்கலம் நிலைவை சுற்றி வருகிறது: நாசா தகவல்

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (19:10 IST)
2009 ஆம் ஆண்டு தொலைந்து போனதாக கருத்தபட்ட இந்தியாவின் முதல் நிலவு ஆய்வு விண்கலம் நிலவை சுற்றி வருவதை நாசா கண்டறிந்து உள்ளது. 


 

 
இந்திய விண்வெளித்துறை நிலாவை ஆராய்வதற்கு முதன்முதலாக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி விண்ணில் ஏவியது. இதையடுத்து 2009ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதி முதல் சந்திராயன்-1 விண்கலத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அந்த விண்கலம் தொலைந்து விட்டதாக கருதியது.
 
இந்நிலையில் தற்போது சந்திராயன்-1 விண்கலம் தொலைந்து போகவில்லை என நாசா தெரிவித்துள்ளது. மேலும் சந்திராயன்-1 விண்கலம் சந்திர மேற்பரப்புக்கு 200 கி.மீ தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விதிக்கப்பட்ட சுற்றுப்பாதையை கடந்து வேறு சுற்றுப் பாதையில் விண்கலம் சுற்றினால் அதனுடன் தொடர்பு கொள்வது இயலாமல் போகலாம். இஸ்ரோ சந்திராயன்-1 விண்கலத்துடன் தொடர்பை இழந்தத்தற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments