Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனில் பச்சை நிறக்கோடுகள் இருக்கிறதா.? வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சாம்சங்..!!

Senthil Velan
திங்கள், 22 ஏப்ரல் 2024 (22:22 IST)
கேலக்சி மாடல் செல்போன்களின் திரையில் பச்சை நிறக்கோடுகள் தெரிந்தால் டிஸ்ப்ளேவை மாற்றிக் கொடுப்பதாக சாம்சங் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
 
பல்வேறு புது வகை செல்போன்களை அறிமுகப்படுத்தி  வாடிக்கையாளர்களை சாம்சங் நிறுவனம் வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் கேலக்சி மாடல் செல்போன்கள் மற்றும் நோட் மாடல் செல்போன்களில் திரையில் பச்சை நிற கோடுகள் வருவதாக தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன.
 
இந்நிலையில் இந்த புகார்களுக்கு தீர்வு காணும் விதமாக சாம்சங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கேலக்சி மாடல் செல்போன்களின் திரையில் பச்சை நிறக்கோடுகள் தெரிந்தால் டிஸ்ப்ளேவை மாற்றிக் கொடுப்பதாக அறிவித்துள்ளது
 
கேலக்ஸி S20, S20+,S20 அல்ட்ரா, நோட் 20, நோட் 20 அல்ட்ரா, கேலக்ஸி S21, S21+,S21 அல்ட்ரா, கேலக்ஸி 21 அல்ட்ரா மாடல் செல்போன்களுக்கு இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இருப்பினும் S21 FE, S20 FE, S22, S22+ போன்ற செல்போன் மாடல்களில் இந்த அறிவிப்பு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரைப்படங்களில் போலிஸ் வன்முறையை கொண்டாடுபவர்கள் இப்போது ஏன் கவலை கொள்கிறார்கள்?": விஜய்க்கு கனிமொழி மறைமுக கேள்வி..!

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. விஜய் செய்வது நாகரீக அரசியல்: பத்திரிகையாளர் மணி

போரை நிறுத்தாவிட்டால் 100% வரி.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை.. புடின் பதில் என்ன?

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments