Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாதத்தில் 2,866 கோடி ரூபாய் நஷ்டம் – ஏர்டெல் அடுத்த அதிரடி முடிவு !

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (10:08 IST)
ஏர்டெல் நிறுவனம் கடுமையான நஷ்டத்தை அடைந்து வரும் வேளையில் தனது  3ஜி வாடிக்கையாளர்களை 4ஜி சேவைக்கு மாறும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஜியோவின் வருகை மற்ற நிறுவனங்களை ஆட்டம் காண வைத்துள்ளது. ஜியோவின் அசுர வளர்ச்சியை சமாளிக்க முடியாமல் மற்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழக்காமல் இருக்க போராடி வருகின்றன. ஏர்செல் போன்ற நிறுவனங்கள் தங்கள் சேவையையே நிறுத்தி விட்டன.  ஜியோவின் வருகைக்கு முன் ராஜாவாக இருந்த ஏர்டெல் நிறுவனமும் இதற்கு விதிவிலக்கு இல்லை.

இந்நிலையில் ஏர்டெல் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தங்கள் 4 ஜி சேவையை பலப்படுத்த 3ஜி சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக கொல்கத்தாவில் 3ஜி சேவை கடந்த மாதம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 3ஜி சேவைக்கு இதுவரை வழங்கப்பட்ட 900 MHz அலைக்கற்றையை அப்படியே 4ஜி சேவைக்குப் பயன்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் 2 ஜி சேவை வழக்கம்போல தொடரும் எனவும் 3ஜி பயனாளர்கள் அப்படியே 4ஜிக்கு மாறிக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்களை இழந்தாலும் கணிசமாக அளவில் வருமானத்தை அதிகமாக்க முடியும் என நினைக்கிறது ஏர்டெல்.  கடந்த 14 ஆண்டுகளில் ஏர்டெல் நிறுவனம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கடைசி காலாண்டில் முதல் முறையாக ரூ 2,866 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments