Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் தொலைந்துவிட்டால் ரூ.50 கட்டணத்தில் புதிய அசல் ஆதார் அட்டை: விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம்

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (10:55 IST)
ஆதார் அட்டை தொலைந்து விட்டால், . ரூ.50 கட்டணம் செலுத்தி இந்த புதிய அட்டையை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

 

 
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சமூகநல திட்டங்களுக்கான பண பலன்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை இந் திய தனி அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) மேற்கொண்டு வருகிறது.
 
இந்நிலையில் யுஐடிஏஐ நிறுவனம், ஆதார் கார்டு தொலைந்து போனால், ரூ.50 கட்டணத்தில் அசல் ஆதார் அட்டையை வழங்கும் சேவையை சோதனை முயற்சியில் தொடங்கியுள்ளது.
 
புதிய அசல் ஆதார் அட்டை வேண்டுவோர், www.uidai.gov.in என்ற இணையதளத்தில் Order Aadhaar Reprint (Pilot Basis) என்ற பகுதியை சொடுக்கி, புதிய அட்டைக்கு பதிவு செய்யும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு ரூ.50 கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். அதன் பின்னர் விரைவு அஞ்சலில் ஆதார் அட்டை வீட்டுக்கே வந்து சேரும். இது மாதிரி திட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறைகள் ஏதேனும் இருப்பின், பின்னாட்களில் சரி செய்யப்படுமாம்.
 
தமிழகத்தில் இதுவரை 5 வயதுக்கு மேற்பட்ட 7 கோடியே 64 லட்சம் பேரில் 7 கோடியே 16 லட்சம் பேருக்கு (93.6 சதவீதம்) ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments