Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடப்படுகிறதா பி.எஸ்.என்.எல்? 54,000 பணியாளர்கள் நீக்கம்

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (15:04 IST)
இந்திய டெலிகாமில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நுழைந்ததில் இருந்தே மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
 
குறிப்பாக பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் கடுமையான நிதி சிக்கலை சந்தித்து வருகிறது.  நாடு முழுவதும் உள்ள தனது 1.76 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் திணறி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 55% வருவாய் ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டுமே செலவிடப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 8% கூடிக்கொண்டே போகும். 
 
இந்நிலையில் பி.எஸ்.என்.எல் தங்களது 54,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக வி.ஆர்.எஸ் திட்டத்தின் கீழ் பணியிலிருந்து விலக்கப்பட உள்ளனர். அதேபோல் ரிட்டயர்மண்ட் வயதும், 60-ல் இருந்து 58 ஆகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களை நீக்குகிறது பி.எஸ்.என்.எல். தேர்தல் முடிந்தவுடன், பணியாளர்கள் நீக்கப்படலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments