இந்தியாவின் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் 4ஜி தொழில்நுட்பத்திலான அதிவிரைவு வயர்லெஸ் இணைய சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது.
4 ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் முதன்முதலாக கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது.
இந்த தொடக்க விழாவில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் கலந்துகொண்டு சேவையை தொடங்கி வைத்தார்.
4 ஜி தொழில்நுட்பம் மூலம் நடமாட்டத்தில் இருக்கும்போது, விநாடிக்கு 100 மெகாபிட்ஸ் அளவு பதிவிறக்க வேகத்தை பெற முடியும். அதேசமயம் நிலையான இடத்தில் இருந்து பயன்படுத்தும்போது, அதன் வேகம் விநாடிக்கு 1 ஜிகாபைட் அளவு இருக்கும் என கூறப்படுகிறது.
பிராட்பேண்ட் வயர்லெஸ் அக்சஸ் அலைக்கற்றையான 4ஜியை, ரூ. 3314.36 கோடிக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு ஏர்டெல் வாங்கியது. கொல்கத்தா,மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா ஆகிய 4 தொலைத்தொடர்பு வட்டங்களுக்கு மட்டுமே இந்த சேவையை வழங்க ஏர்டெல் ஏலம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேப்போன்று, ஏர்செல், டிகோனா, ஆகிரீ, குவல்காம் உள்ளிட்ட நிறுவனங்களும் 4ஜி அலைக்கற்றையை ஏலம் பெற்றுள்ளது.
News Summary: Bharti Airtel, the biggest telecom services company, launched broadband wireless access or BWA services based on 4G technology in Kolkata today.