நாகர்கோயிலில் கூகுள் பேருந்து
, செவ்வாய், 17 மார்ச் 2009 (15:30 IST)
நாகர்கோயிலில் உள்ள ஆதர்ஷ் வித்யா கேந்த்ரா மேல்நிலைப் பள்ளி பள்ளியில் இன்று கூகுள் பேருந்து இணையதளப் பிரச்சாரத்தை மேற்கொண்டது.பள்ளி மாணவ மாணவிகள், கூகுள் பேருந்துக்குள் சென்று இணையத்தின் பயன்பாடுகள் குறித்து கேட்டும், பார்த்தும் அறிந்து கொண்டனர்.கூகுள் பேருந்தைப் பார்த்து முடித்ததும், அதன் அருகே அமைக்கப்பட்டிருந்த தமிழ்.வெப்துனியா.காம் இணையத் தளத்தின் பந்தலிற்கும் வந்து, தமிழ் மொழியில் இணையத்தின் பயன்பாடு எந்த அளவி்ற்கு உள்ளது என்பதையும், அதன் பணிகள் பற்றியும் அறிந்து கொண்டனர்.
எமது இணையத் தளத்தை ஆர்வத்துடன் அறிந்துகொள்ள முன்வந்த மாணாக்கர்களுக்கு, வெப்துனியா.காம் அளிக்கும் சிறப்பான சேவைகளான மின்னஞ்சல், மைவெப்துனியா, வினாடி வினா ஆகியவற்றை துணை ஆசிரியர்கள் வெங்கட சேது, இராஜசேகர் ஆகியோர் விளக்கினர். தமிழ்.வெப்துனியா.காம் அளிக்கும் சேவைகளை விளக்கிடும் கைப்பிரதிகளும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டது.