Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் லேப்-டாப் விற்பனை அதிகரிப்பு

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2009 (13:27 IST)
நாடு முழுவதும் பொருளாதார தேக்கநிலை மாறி தகவல் தொழில்நுட்பத் துறை முன்னேற்றத்தை நோக்கி பயணிப்பதாலும், கேரள மாநிலத்தில் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாலும் அம்மாநிலத்தில் மடிக்கணினிகள் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

டெஸ்க்டாப் கணினிகளைக் காட்டிலும், லேப்-டாப் விற்பனை உயர்வை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தனியார் கல்வி நிறுவனங்களில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு லேப்-டாப் அத்தியாவசியத் தேவை என்பதால், அவற்றின் விற்பனை வேகமாக அதிகரித்து வருவதாக கணினித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலத்தில் மொத்த கணினி விற்பனையில் 30 விழுக்காடு லேப்-டாப் ஆக உள்ள நிலை இந்த ஆண்டு இறுதிக்கும் 40 விழுக்காட்டை எட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments