Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பிரிக்காவில் விரிவு படுத்த பி.எஸ்.என்.எல். திட்டம்

Webdunia
புதன், 24 ஜூன் 2009 (16:15 IST)
அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஆப்பிரிக்காவிலும் தங்கள் சேவைகளை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான எம்.டி.என்., உலக அளவில் புகழ் பெற்ற முன்னணி நிறுவனங்களான பார்தி ஏர் டெல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதையடுத்து பி.எஸ்.என்.எல். நிறுவனமும் அங்கு தனது சேவைகளை அளிக்க முன்வந்துள்ளது.

அங்கு புதிய உரிமங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களை வாங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் குல்தீப் கோயல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

" ஆப்பிரிக்காவில் கால்பதிக்க பல்வேறு வாய்ப்புகளையும் பரிசீலித்து வருகிறோம், புதிய உரிமங்கள் அல்லது ஏற்கனவே உரிமம் வைத்திருக்கும் நிறுவனங்களுடன் கூட்டுறவு என்று பல வாய்ப்புகளையும் பரிசீலித்து வருகிறோம்" என்றார்.

அயல் நாட்டு முதலீட்டுத் திட்டங்களுக்கு அரசு அனுமதி கிடைத்துள்ளது என்று கூறிய கோயல், பி.எஸ்.என்.எல். பெரிய அளவில் முதலீடு செய்ய தயாராக உள்ளது என்றார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments