Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டன் நிறுவனத்தை வாங்குகிறது ஹெச்.சி.எல்.!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (11:47 IST)
பிரிட்டனின் லிபரடா நிதிச் சேவை நிறுவனத்தை தகவல் தொழில் நு‌ட்ப முன்னணி நிறுவனமான ஹெச்.சி.எல். நிறுவனம் வாங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

பிரிட்டனின் நிதிச் சேவை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வரும் லிபரடா நிறுவனம் காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறைக்கு நிர்வாக மற்றும் வாடிக்கையாளர்கள் சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த ஒப்பந்தத்தின் படி, பிரிட்டனில் இந்த நிறுவனத்தின் 4 மையங்களில் உள்ள 800 ஊழியர்களையும் சேர்த்து ஹெச்.சி.எல். வாங்கவுள்ளது. அந்த நிறுவனத்தின் வருவாய் 60 மில்லியன் டாலர்களாக உள்ளது.

மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் ஹெச்.சி.எல். நிறுவனம் வர்த்தக வளர்ச்சி மற்றும் தொழில் நுட்ப நடைமுறைகள் மேம்பாடு ஆகியவற்றிற்காக 24 மில்லியன் டாலர்கள் தொகையை முதலீடு செய்யவுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments