Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலடி கேபிள் துண்டிப்பு: பிபிஓ, ஐ.டி நிறுவனஙக்ள் பாதிப்பு

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (16:05 IST)
மேற்கு ஆசியாவில் இருந்து ஐரோபபாவை இணைக்கும் கடலுக்கு அடியில் செல்லும் கேபிள்கள் (கண்ணாடி இழை) துண்டிக்கப்பட்டிருப்பதால் இந்தியாவில் பிபிஓ மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணிகள் பாதிப்புக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் வெள்ளிக்கிழமை வரை இந்த பாதிப்பு இருக்கும் என்றும், அதன் பின்னர் இண்டர்நெட் இணைப்பு சீராகும் என்றும் இணைய தள சேவை வழங்கும் சங்கத்தின் தலைவர் ராஜேஷ் சாரியா தெரிவித்துள்ளார்.

இணையதள இணைப்புகளின் வேகம் குறைந்ததாலும், டேட்டா நெட்வொர்க் நெருக்கடி அதிகரித்ததன் காரணமாகவும் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே டாடா கம்யூனிகேஷன் நிறுவன அதிகாரிகக்ள் கூறுகையில், வரும் வெள்ளிக்கிழமை கடலடி கேபிள் இணைப்புகள் சரியாகும் என்றும், கேபிள்களை பழுது நீக்கும் பணிகள் தொடங்கி விட்ட்தாகவும் தெரிவித்தனர்.

கேபிள் பாதிப்பால் இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் இணைய தள இணைப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments