Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏப்ரல் 1ல் இணையத்தை வைரஸ் தா‌க்கு‌ம் அபாய‌ம்

ஏப்ரல் 1ல் இணையத்தை வைரஸ் தா‌க்கு‌ம் அபாய‌ம்
, புதன், 25 மார்ச் 2009 (20:26 IST)
இணைய கணினிகளை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி கானஃபிக்கர் சி (Conficker C) என்ற வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளதாக கணினி பாதுகாப்பு நிபுணர் கூறியுள்ளார்.

கானஃபிக்கர் சி வைரஸ் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள மோசமாக கணினி மென்பொருள் என்ற கூறியுள்ள நிபுணர், இது கணினியில் தானாகவே இன்ஸ்டால் செய்து கொண்டு மறைந்து கொள்ளும் தன்மை கொண்டது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறிய கணினி பாதுகாப்பு நிபுணர் கிரஹாம் குலூலே, கானஃபிக்கர் சி வைரஸானது ஏப்ரல் 1 ஆம் தேதி கணினியை பாதிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதனால் ஏதாவது நிகழ்ந்துவிடக்கூடும் என்று கூறிவதற்கில்லை என்றாலும், இந்த வைரஸ் கண்டிப்பாக ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தும் எ‌ன்றே தெ‌ரி‌கிறது என்றும், இணையத்தில் மறைந்திருந்து குறிப்பிட்ட தேதியில் தாக்கும்படி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil