Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
எர்ணாகுளம் அருகே ரூ. 4,000 கோடியில் தகவல் தொழில் நுட்ப நகர்!
Webdunia
வியாழன், 17 ஜனவரி 2008 (18:33 IST)
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமச்சேரியில் 4,000 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக உள்ள ஒருங்கிணைந்த குடியிருப்பு மேம்பாடு மற்றும உள் கட்டமைப்பு நிறுவனத்தின் (ஹெச்.டி.ஐ.எல்.) தகவல் தொழில் நுட்ப நகரை வரும் 19 ஆம் தேதி அம்மாநில முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கிறார ்.
களமச்சேரியில் 70 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த ஒருங்கிணைந்த தகவல் தொழில் நுட்ப நகரில ், தகவல் தொழில் நுட்பம ், அது சார்ந்த நிறுவனங்கள ், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள ், பள்ளிகள ், வணிக வளாகங்கள ், நட்சத்திர உணவகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற உள்ளதாக ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் ராகேஷ் குமார் வாத்வான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம் அடுத்த 48 மாதங்களில் ரூ.4,000 கோடி முதலீட்டில் மேற்கொள்ளும் இந்த தகவல் தொழில் நுட்ப நகரத்தின் மூலம் 60,000 பேருக்கு நேரடியாகவும ், 1,50,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தகவல் தொழில் நுட்பம ், அதனைச் சார்ந்த நிறுவனங்களில் இந்தியாவிலும ், பல அயல் நாடுகளிலும் உள்ள பெரிய நிறுவனங்கள் கொச்சியில் நிறுவனங்களைத் தொடங்க ஆர்வமாக உள்ளதாகவும ், இந்த நிறுவனங்கள் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார ்.
இத்துறை நிறுவனங்களை அமைக்க விரும்பும் இடங்களில் நாஸ்காம் பட்டியலில் கொச்சி இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இத்துறைகளில் 5 லட்சம் பணியிடங்கள் கேரளாவில் உருவாகும் என்று நாஸ்காம் தெரிவித்துள்ளதைச் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் அரசுக்கு பதிவ ு, முத்திரைத்தாள ், தொழிலாளர் நலன ், கிராம வரி ஆகியவற்றின் மூலம் ஆண்டுக்கு 425 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் உள்ளூர் இயற்கை ஆதாரங்கள ், உள்கட்டமைப்பு ஆகியவை பாதிக்காத வகையில் ஜெர்மன் தொழில் நுட்பத்திலான கழிவு நீர் சுத்திகரிப்பு மையம ், மின்சார உள்கட்டமைப்பு ஆகியவை தனியாக இந்த தகவல் தொழில் நுட்ப நகரில் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கொச்சியை பெங்களூரைப் போன்று மாற்றப் போவதில்லை. ஏனென்றால் பெங்களூரின் பண்பாட ு, பழக்க வழக்கம் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களால் மாற்றப்பட்டுள்ளது. அதைப் போன்ற நிலை வரக் கூடாது என்பதால் இந்த நகரில் 70 விழுக்காடு இடங்கள் தகவல் தொழில் நுட்பம ், அதனைச் சார்ந்த நிறுவனங்களுக்கும ், மிதியுள்ள 30 விழுக்காடு இடத்தில் மற்ற தொழில்கள் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் என ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் ராகேஷ் குமார் வாத்வான் தெரிவித்துள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
Show comments