Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் அதிவேக கணினி-அமெரிக்கா சாதனை!

Webdunia
செவ்வாய், 10 ஜூன் 2008 (10:25 IST)
அமெரிக்க ஆயுதங்கள் பரிசோதனை மையம் உலகின் அதிவேக கணினியை தயாரித்துள்ளது.

ஒரு வினாடியில் 1000 ட்ரில்லியன் நடவடிக்கைகளை இந்த சாதனைக் கணினி செய்து முடிக்கும் திறன் கொண்டது.

அமெரிக்க எரிசக்தித் துறையும் ஐ.பி.எம். நிறுவனமும் இந்த சூப்பர் கணினி பற்றிய அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

" ரோட்ரன்னர்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கணினி, அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் கையிருப்பை பராமரிக்கவும், உலக எரிசக்தி நெருக்கடிகளை தீர்க்க உதவவும், மேலும் பல்வேறு அடிப்படை ஆராய்ச்சி மூலம் அறிவுத் துறையை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என்று எரிசக்தி செயலர் சாமுயேல் போட்மேன் தெரிவித்தார்.

நியூ மெக்சிகோவில் உள்ள 'தி லாஸ் அலமோஸ் நேஷனல் பரிசோதனைக் கூடமும், ஐ.பி.எம். நிறுவனமும் இந்த அதிவேக உலக சாதனை கணினியை வடிவமைக்கும் பணியில் கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments