Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பிரிக்காவில் விரிவு படுத்த பி.எஸ்.என்.எல். திட்டம்

Webdunia
புதன், 24 ஜூன் 2009 (16:15 IST)
அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஆப்பிரிக்காவிலும் தங்கள் சேவைகளை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான எம்.டி.என்., உலக அளவில் புகழ் பெற்ற முன்னணி நிறுவனங்களான பார்தி ஏர் டெல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதையடுத்து பி.எஸ்.என்.எல். நிறுவனமும் அங்கு தனது சேவைகளை அளிக்க முன்வந்துள்ளது.

அங்கு புதிய உரிமங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களை வாங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் குல்தீப் கோயல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

" ஆப்பிரிக்காவில் கால்பதிக்க பல்வேறு வாய்ப்புகளையும் பரிசீலித்து வருகிறோம், புதிய உரிமங்கள் அல்லது ஏற்கனவே உரிமம் வைத்திருக்கும் நிறுவனங்களுடன் கூட்டுறவு என்று பல வாய்ப்புகளையும் பரிசீலித்து வருகிறோம்" என்றார்.

அயல் நாட்டு முதலீட்டுத் திட்டங்களுக்கு அரசு அனுமதி கிடைத்துள்ளது என்று கூறிய கோயல், பி.எஸ்.என்.எல். பெரிய அளவில் முதலீடு செய்ய தயாராக உள்ளது என்றார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments