Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்ட்ராய்ட் மொபைல் சந்தையில் நோக்கியா

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2014 (15:06 IST)
நோக்கியாவின் புதிய ஆண்ட்ராய்ட் மொபைல் விரைவில் வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
FILE

நவீன யுகத்தில் நாளுக்கு நாள் ஸ்மார்ட் போன்களின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. சாதாரண போன் விற்பனையில் நோக்கியா முதலிடத்தை வகித்து வந்தாலும், ஸ்மார்ட் போன்களில் அதன் விற்பனை மந்தமாக உள்ளது. ஸ்மார்ட் போன்களில் ஆண்ட்ராய்ட் மொபைல்களின் விற்பனை அதிகரித்து வருவதுதான் காரணம்.

இந்நிலையில் ஆண்ட்ராய்ட் துறையில் நுழைய இருப்பதாக கடந்த நவம்பரில் நோக்கியா அறிவித்திருந்தது. வரும் 24 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டில் நடைபெற உள்ள உலக மொபைல் மாநாட்டில் நோக்கியாவின் புதிய ஆண்ட்ராய்ட் மொபைல் வெளியிடப்படவுள்ளது. நோக்கியாவின் ஆண்ட்ராய்ட் மொபைல்கள் குறைந்த விலைகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் வலைத்தளத்தில் புதிய ஆண்ட்ராய்ட் மொபைலின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவை:-

- 4 இன்ச் டிஸ்ப்ளே
- 512 எம்.பி. உள் மெமரி, 4 ஜி.பி. மெமரி கார்ட் பொருத்திக்கொள்ளலாம்.
- 5 மெகாபிக்ஸல் கேமிரா
- ஒன்று / இரட்டை சிம் போன்கள்
- ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட்
- கூகுளின் சமீபத்திய ஆபரேட்டிங் சிஸ்டம்
- கூகுள் ப்ளே ஸ்டோர்

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments