Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகாஷ்-2 அடுத்த மாதம் அறிமுகம்

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2012 (21:32 IST)
FILE
மத்திய அரசின் குறைந்த விலை தயாரிப்பான ஆகாஷ் கையடக்க கணினி அடுத்த மாதம் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

ஏழை மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு மிகவும் குறைந்த விலையில், ஆகாஷ் கையடக்க கணினியை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் கபில் சிபல், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பல்வேறு வகைகளில் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் கையடக்க கணினியின் இரண்டாம் பதிப்பு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த கணினிக்காக மத்திய அரசு, உலகம் முழுவதிலும் உள்ள கணினி தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

News Summary:

A faster and enhanced version of low-cost tablet PC, Aakash, would be launched next month, Telecom Minister Kapil Sibal said

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments