Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாப்பிடும் முன் கவனிக்க வேண்டியவை

சாப்பிடும் முன் கவனிக்க வேண்டியவை
, வெள்ளி, 31 ஜூலை 2009 (15:30 IST)
சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்) கீழ்க்கண்ட விதிகளை கூறியுள்ளார்.

அதாவது, இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி கிடப்பதால் எளிதில் முதும¨ அடைந்துவிடுவீர்கள்.

webdunia photo
WD
மூச்சு விடாமல் தண்ணீர் குடிக்காதீர்கள். இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு குடிப்பதும், குடிக்கும்போது பிஸ்மில்லாஹ் (எல்லாம் இறைவனால் நடக்கிறது) என்று கூறி குடியுங்கள்.

குடித்த பிறகு அல்ஹம்துலில்லாஹ் (இறைவனுக்கு நன்றி) என்று கூறுங்கள்.

இடது கையால் உண்ணவோ நீர் அருந்தவோக் கூடாது. ஏன் என்றால், ஷைத்தான் அப்படித்தான் செய்யும்.

உணவில் வீண் செலவும் ஆடம்பரமும் வேண்டாம். முடிந்தவரை உணவை தர்மம் பண்ணுங்கள்.

வயிறு நிறைய சாப்பிட்டீர்களானால், இறுதிக் காலத்தில் சாப்பிட முடியாமல் கஷ்டப்படுவீர்கள்.

இறைச்சி சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள். தினமும் இறைச்சியைத் திண்ணும் குடும்பத்தார் மீது இறைவன் கோபமடைகிறான்.


Share this Story:

Follow Webdunia tamil