Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு – நிறுத்தப்பட்டது ஐபிஎல் தொடர்!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (13:12 IST)
ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா உறுதியாகி வரும் நிலையில் ஐபிஎல் தொடரை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் விருவிருப்பாக நடந்து வந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் நேற்றைய ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சூபர் கிங்ஸ் அணி நிர்வாக இயக்குனர், பந்துவீச்சு பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நாளை நடக்க உள்ள போட்டியை துறப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணி வீரர் வ்ரத்திமான் சஹாவுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து வீரர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாவதை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தற்காலிகமாக நிறுத்தப்படும் இந்த தொடர் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments