Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் மீது எழும் விமர்சனங்கள் குறித்து கவலை இல்லை - யுவராஜ் சிங்

என் மீது எழும் விமர்சனங்கள் குறித்து கவலை இல்லை - யுவராஜ் சிங்
, வியாழன், 7 மே 2015 (09:45 IST)
என் மீது எழும் விமர்சனங்கள் குறித்து எவ்வித கவலையும் பாதிப்பும் ஏற்படவில்லை என டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார். 
8 ஆவது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி அணியில் இடம்பெற்றிருக்கும் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் நடப்பு தொடரில் பெரிதாக பிரகாசிக்கவில்லை. மேலும் டெல்லி அணி சார்பாக யுவராஜ் சிங், அதிக விலைகொடுத்து  ஏலத்தில் வாங்கப்பட்டவர் ஆகும். இதனால் யுவராஜ் சிங் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. 
 
இதுகுறித்து யுவராஜ்சிங் கூறுகையில், நான் தொலைக்காட்சிகள் பார்ப்பதில்லை, மேலும்  விமர்சனங்களை படிக்கவும் போதிய நேரமில்லை. எனவே இதுகுறித்து கவலைபட வேண்டிய அவசியம் இல்லை. தற்போதைய சூழலில் எங்கள் அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற எஞ்சிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே இதை கருத்தில் கொண்டு நாங்கள் திறம்பட செயலாற்றுவோம் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil