Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி பரிதாபம்

Webdunia
வெள்ளி, 1 மே 2015 (16:38 IST)
இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 10 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
 
இன்று நடைபெற்று வரும் 8ஆவது ஐபிஎல் போட்டியின் 31ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டெல்லி டேர் டேவில்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜே.பி. டுமினி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
 
ஷேவாக் ஆட்டமிழந்ததை கொண்டாடும் டெல்லி அணியினர்
அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் முதல் ஓவரின் 2 பந்திலேயே வீரேந்திர ஷேவாக் 1 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஷான் மார்ஷ் (5) இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் வெளியேறினார்.
 
அதன் பிறகு மூன்றாவது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான மனன் வோராவும் 1 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய விருத்திமான் சாகாவும் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 4ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி 3.3 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பேட்டிங்கில் அதிரடி காட்டாத ஐதராபாத்.. ராஜஸ்தானுக்கு எளிய இலக்கு..!

இறுதி போட்டிக்கு செல்வது யார்? டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு! ப்ளேயிங் 11 அப்டேட்!

வின்னர் யாருன்னு இப்பவே முடிவு பண்ணியாச்சா? சென்னை சேப்பாக்கம் பேனரால் எழுந்த சர்ச்சை!

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு ரிக்கி பாண்டிங்கை யாரும் அணுகவில்லை: ஜெய்ஷா

”ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டுதான் இருக்கேன்!” வெற்றியின் ரகசியத்தை சொன்ன ‘தல’ தோனி!

Show comments