Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல்: தோல்வி குறித்து ரோகித் சர்மாவின் புலம்பல்

ஐபிஎல்: தோல்வி குறித்து ரோகித் சர்மாவின் புலம்பல்
, சனி, 25 ஏப்ரல் 2015 (12:46 IST)
ஐபிஎல் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து நிலை தடுமாறி துவண்டு வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
8 ஆவது ஐபிஎல் போட்டிகள் இந்தியா முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்விகளால் துவண்டு வருகிறது. ஏன் சமீபத்திய லீக் போட்டியிலும் டெல்லி அணி 37 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. 
 
இதுகுறித்து மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், டெல்லி அணி அபாரமாக செயல்பட்டதால் எல்லா சிறப்புகளும் அவர்களையே சென்றடையும். குறிப்பாக டெல்லி அணியின் பேட்டிங் வரிசை மிக அருமையாக அமைந்தது. எங்கள் அணியில் சிமோன்ஸ், பார்த்தீவ் பட்டேல் சிறப்பாக செயல்பட்டாலும் பின் வந்த வீரர்கள் அவ்வாறு செயல்படாததே ஆட்டத்தின் போக்கை மாற்றியது என்றார். 

Share this Story:

Follow Webdunia tamil