Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல்: பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை

ஐபிஎல்:  பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை
, ஞாயிறு, 3 மே 2015 (13:13 IST)
இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரிச்சை நடத்தவுள்ளன.
 
8 ஆவது ஐபிஎல் திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மொகாலியில் நடக்கவுள்ள இப்போட்டியில் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் களத்தில் மோத காத்துகொண்டிருக்கின்றன.
பஞ்சாப் அணியில் மில்லர், மிட்செல் ஜான்சன், சகா, அக்‌ஷர் பட்டேல் போன்ற நட்சத்திர வீரர்கள் அணிக்கு வலுசேர்க்கும் நிலையில் உள்ளனர். எனினும் இவ்வணி நடப்பு தொடரில் இன்னும் தனது தாக்குதல் வேட்டையை தொடங்கவில்லை என்றே கூறவேண்டும். நடப்பு தொடரில் இதுவரை 8 போட்டியில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 2 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மும்மை அணியில் ரோகித் சர்மா, போல்லார்டு, ராயுடு, மலிங்கா ஆகிய நட்சத்திர வீரர்கள் பஞ்சாப் அணியை மிரட்டவுள்ளனர். கடந்த ஆட்டத்தில் இவர்கள் பெற்ற வெற்றி அணிக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல. இன்றும் அதே நிலை தொடர்ந்தால் பஞ்சாப்பின் நிலை கேள்விக்குறிதான். இதுவரை 8 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றிகளை ருசித்துள்ளது மும்பை அணி.

Share this Story:

Follow Webdunia tamil