Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல்: மழையால் ரத்தான ஆட்டம்: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூர்

ஐபிஎல்: மழையால் ரத்தான ஆட்டம்: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூர்
, திங்கள், 18 மே 2015 (09:58 IST)
நேற்றைய லீக் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யபட்டதால், பெங்களூர் அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிடைத்துள்ளது.
8 ஆவது ஐபிஎல் போட்டிகள் இந்தியா முழுவதும் நடைபெற்றுகொண்டு வருகிறது. இதில் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூர்- டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்கள் எடுத்தது.
 
இடைத்தொடர்ந்து ஆடிய பெங்களூர் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான கெய்லும், கோலியும் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். இதில் ஆட்டம் தொடங்கிய சற்று நேரத்திலேயே மழை பெய்ய தொடங்கியது. கனமழை விடாது பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் சமமாக வழங்கப்பட்டது. இதன்மூலம் பெங்களூர் அணி 16 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil