Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல்: யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக், ஜாகிர் கான், புஜாரா ஆகியோருக்கு கல்தா

ஐபிஎல்: யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக், ஜாகிர் கான், புஜாரா ஆகியோருக்கு கல்தா
, செவ்வாய், 16 டிசம்பர் 2014 (10:10 IST)
அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அணித் தேர்வில், ஏற்கனவே இருந்த அணிகளில் இருந்து யுவராஜ்சிங், தினேஷ் கார்த்திக், ஜாகிர் கான், புஜாரா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
வரும் 2015ஆம் ஆண்டு, ஏப்ரல் 16ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 8ஆவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்கள் வீரர்களை தக்க வைத்து கொள்வதற்கும், விடுவிப்பதற்கும் நேற்று கடைசி நாளாகும்.
 
இந்த வகையில், கடந்த ஆண்டில் அதிக தொகைக்கு (ரூ.14 கோடி) ஏலம் போன யுவராஜ்சிங்கை, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விடுவித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலை விடுவித்து இருக்கிறது.
 
இதேபோல் கடந்த ஆண்டில் ரூ.12.5 கோடிக்கு ஏலம் எடுத்த தினேஷ் கார்த்திக், கேப்டன் கெவின் பீட்டர்சன் ஆகியோரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி விடுவித்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து புஜாரா, பாலாஜி, முரளி கார்த்திக் ஆகியோர் விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
 
மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், மைக் ஹஸ்ஸி, பிரவீன்குமார் ஆகியோரை விடுவித்து இருக்கிறது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் விஜய் உள்பட 13 வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil