Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல்: புள்ளிபட்டியலில் முதலிடத்தை பெறுமா சென்னை அணி?

ஐபிஎல்: புள்ளிபட்டியலில் முதலிடத்தை பெறுமா சென்னை அணி?
, சனி, 25 ஏப்ரல் 2015 (13:17 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.
 

 
8 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன. இதில் தோனி தலைமையிலான சென்னை அணி இன்று வெற்றி பெற்றால் புள்ளிபட்டியலில் முதலிடத்தை எட்ட வாய்ப்புள்ளது. இத்தொடரில் சென்னை அணி  4 வெற்றி, 1 தோல்வி என 8 புள்ளிகளுடன்  2 ஆவது இடத்தில் உள்ளது. 
 
மேலும் பேட்டிங்கில் சுமித்,  ரெய்னா, தோனி, டுபெலிசிஸ் ஆகியோர் மீண்டும் அசத்துவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் நெய்ரா, பிராவோ, அஸ்வின், மொகித் சர்மா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல், மில்லர், முரளிவிஜய், ஷேவாக் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளதால் ஆட்டத்தில் விருவிருப்பிற்கு பஞ்சமிருக்காது. பஞ்சாப் அணி 2 வெற்றி, 3 தோல்வி என 4 புள்ளிகள் பெற்று 7 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil