Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.பி.எல்: டி20 போட்டிகளில் சாதிப்பது குறித்து மனம் திறக்கிறார் பிரவீன் தாம்பே

ஐ.பி.எல்: டி20 போட்டிகளில் சாதிப்பது குறித்து மனம் திறக்கிறார் பிரவீன் தாம்பே
, சனி, 18 ஏப்ரல் 2015 (10:55 IST)
தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ள ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சாதிப்பது பற்றி  ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் தாம்பே மனம் திறந்து கூறியுள்ளார்.
 
8 ஆவது ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ஐதராபாத் சன் ரைசர்சஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருக்கும் சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் தாம்பே களத்தில் கலக்கி வருகிறார். 
ராஜஸ்தானின் வெற்றி குறித்து பிரவீன் தாம்பே கூறுகையில், டி20 போட்டிகளில் பங்குபெற உடல்தகுதி முக்கிய பங்காற்றுகிறது. என் வயது 43 ஆகும். இவ்வயதில் சரியான உணவு முறைகளை கடைபிடிப்பது முக்கியம். 
 
மேலும் வயதுக்கும், திறமைக்கும் எவ்வித உடன்பாடுமில்லை. வயது என்பது எண்களை மட்டுமே குறிக்கும் திறமைகளை அல்ல என்றார். மேலும் ஐ.பி.எல் போட்டிகளில் மிகவும் உற்சாகமுடன் விளையாடி வருகிறேன் இதனை எதிர்வரும் ஆட்டங்களிலும் பிரதிபலிப்பேன் என்று கூறினார். 2013 ஆம் ஆண்டு முதல்தர கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகம் ஆன பிரவீன் மும்பை அணிக்காக 2 ரஞ்சி போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil