Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் vs டெல்லி: புனேவில் நடக்கவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம்!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (15:03 IST)
நாளை பஞ்சாப் அணியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதவிருந்த நிலையில் புனேவில் நடக்கவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக நாளை பஞ்சாப் அணியுடன் மோத டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புனே செல்ல இருந்தது.
 
ஆனால், டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதனால் டெல்லி அணியின் புனே பயணம் ரத்து செய்யப்பட்டது. மேலும் டெல்லி அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டனர்.
 
இந்நிலையில் கொரோனா காரணமாக டெல்லி - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான நாளைய ஐபிஎல் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆம், புனேவில் நடக்கவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments