Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் vs டெல்லி: புனேவில் நடக்கவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம்!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (15:03 IST)
நாளை பஞ்சாப் அணியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதவிருந்த நிலையில் புனேவில் நடக்கவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக நாளை பஞ்சாப் அணியுடன் மோத டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புனே செல்ல இருந்தது.
 
ஆனால், டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதனால் டெல்லி அணியின் புனே பயணம் ரத்து செய்யப்பட்டது. மேலும் டெல்லி அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டனர்.
 
இந்நிலையில் கொரோனா காரணமாக டெல்லி - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான நாளைய ஐபிஎல் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆம், புனேவில் நடக்கவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments