Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடக்குமா.. நடக்காதா.. ஐபிஎல் 2020 தலைவிதி தான் என்ன?

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (15:42 IST)
ஐபிஎல் தலைவிதி ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு பின்னரே தெரியவரும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். 
 
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயாக இம்மாதம் 29 ஆம் தேதி நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி நடக்கும் என அறிவிப்படது. ஆனால் அதன் பின்னர் நடத்தப்படுமா என்பது குறித்து உறுதியாக அறிவிக்கப்படவில்லை.
 
இதனால் பிசிசிஐக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் பிசிசிஐ ஜூன் அல்லது செப்டம்பர் மாதத்திலாவது அல்லது வெளிநாடுகளில் வைத்தாவது ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்ற முடிவில் இருப்பதாகத் தெரிந்தது. 
 
மேலும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும் என தெரிவித்திருந்த நிலையில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஐபிஎல் குறித்து பதில் அளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது... 
 
ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு பின்னர் நிலைமைக்கு ஏற்றவாறு ஐபிஎல் குறித்து முடிவெடுக்கப்படும். ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ ஒலிம்பிக் விளையாட்டுகளை போலவே பார்க்கிறது. ஆனால், இப்போது மக்களை விட விளையாட்டு முக்கிமில்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments