Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் தொடரிலிருந்து ஆரோன் பிஞ்ச் விலகல்

ஐபிஎல் தொடரிலிருந்து ஆரோன் பிஞ்ச் விலகல்
, வியாழன், 23 ஏப்ரல் 2015 (11:19 IST)
முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் வீரர் ஆரோன் பிஞ்ச் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகவுள்ளார்.
8 ஆவது ஐபிஎல் திருவிழா இந்தியா முழுவதும் கோலாகலமாக அரங்கேறிகொண்டு வருகிறது. இதில் கடந்த 14 ஆம் தேதி அன்று நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் - மும்பை அணிகள் மோதின. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆரோன் பிஞ்ச் களத்தில் பங்குபெற்ற போது திடீரென காயம் ஏற்பட்டது. மேலும் களத்திலிருந்த ஆரோன் பிஞ்ச் பாதியிலேயே நடையை கட்டினார்.
 
இதனால் ஆரோன் பிஞ்ச் தனது தாயகத்திற்கு திரும்பி பரிசோதனைகளை மேற்கொண்டார். இதில் ஆரோன் பிஞ்சுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது என தெரியவந்தது. மேலும் ஆரோன் பிஞ்சுக்கு உரிய அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் போதிய ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து ஆரோன் பிஞ்ச் விலகுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil