சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக ஓஜா 80 ரன் எடுத்தார்.
பூவா தலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக லாம்ப்-ஓஜா களம் இறங்கினர்.
அதிரடியாக விளையாடிய லாம்ப் 16 பந்தில் 30 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதில் 2 சிக்சர், 3 பவுண்டரிகள் அடங்கும்.
பின்னர் மற்றொரு தொடக்க வீரர் ஓஜாவுடன் இணை சேர்ந்த பாசில் அதிரடியாக விளையாடினார்.
31 பந்தில் ஓஜா அரை சதம் அடித்தார். எதிர்முறையில் விளையாடிக் கொண்டிருந்த பாசில் 17 பந்தில் ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய அதிரடி ஆட்டக்காரர் யூசுப் பத்தான் 8 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
பின்னர் வாகசுடன் இணைந்த ஓஜா, அதிரடியாக விளையாடினார். சதம் அடிப்பார் என்று நினைத்திருந்தபோது அதிர்ஷ்டவசமாக 80 ரன்னில் ஆட்டம் இழந்தார் ஓஜா. இவர் 5 சிக்சர், 6 பவுண்டரிகளை விளாசினார்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் அணி.
178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்க உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.