ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 16 ஓவர்கள் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரராக களம் இறங்கிய ஜெயவர்த்தனே 8 பந்தில் 21 ரன்கள் எடுத்திருந்தபோது மார்கெல் பந்தில் ஆட்டம் இழந்தார்.
பின்னர் வந்த அணித் தலைவர் சங்கக்காரா அதிரடியாக விளையாடி 24 பந்தில் 33 ரன்கள் குவித்தார். இவரது விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய முன்னாள் அணித் தலைவர் யுவராஜ் சிங் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை ரெய்னா எல்.பி.டபிள்யூ முறையில் கைப்பற்றினார்.
தற்போது 15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்துள்ளது.
மார்ஷ் அதிரடியாக விளையாடி அரை சதம் எடுத்தார். இவர் தற்போது 48 பந்தில் 66 ரன்கள் குவித்து விளையாடி வருகிறார். இவருக்கு துணையாக இர்பான் பத்தான் 9 ரன்னுடன் விளையாடி வருகிறார்.
தற்போது பஞ்சாப் அணி 16 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்துள்ளது.