வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு மும்பை இந்தியன் அணியின் மேற்கிந்திய அதிரடி ஆல் ரவுண்டர் கெய்ரன் போலார்ட் உடற்தகுதி பெற்றார்.
நேற்றைய அரையிறுதிப் போட்டியின் போது பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலுமே சற்றே தள்ளாடிய போலார்ட், காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் காயம் ஒன்றும் பெரிதானதல்ல என்று இப்போது தெரிய வந்துள்ளதால் அவர் இறுதிப் போட்டியில் விளையாடுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய அரையிறுதியில் 13 பந்துகளில் 3 மிகப்பெரிய சிக்சர்களுடன் 33 ரன்களை விளாசியதோடு பந்து வீச்சிலும் சிறப்பாக வீசி 3 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆட்ட நாயகன் விருது பெற்றார் போலார்ட ்.