Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துயரத்திலும் சிறப்பான ஆட்டம்: மன்தீப் சிங்கிற்கு கோஹ்லி பாராட்டு

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (18:08 IST)
மன்தீப் சிங்கிற்கு கோஹ்லி பாராட்டு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் 150 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி அதிரடியாக வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த போட்டியில் மந்தீப் சிங் மிக அபாரமாக விளையாடி 56 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார் என்பதும் அவற்றில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் மந்தீப் சிங் தந்தை திடீரென எதிர்பாராத நிலையில் காலமானார். இருப்பினும் தந்தை இறந்த இரண்டு தினங்களில் மீண்டும் அணிக்கு திரும்பிய மந்தீப் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நேற்று அடுத்த அரை சதத்தை தந்தைக்கு அர்ப்பணித்தார்
 
இதுகுறித்து விராத் கோலி கூறியபோது ’தந்தை இறந்து இரு தினங்களே ஆன நிலையிலும் நேற்று பஞ்சாப் அணிக்காக மந்தீப் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கு அவரது தந்தை மேல் இருந்து அவருக்கு ஆசீர்வாதம் செய்வார் என்று விராட் கோலி பாராட்டியுள்ளார் 
 
விராட் கோலியிடம் இருந்து பெற்ற பாராட்டு காரணமாக மந்தீப் சிங் நெகழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments