சென்ற ஆண்டு பர்ப்பிள் கேப் வின்னர்… இந்த ஆண்டு டிரிங்ஸ் பாய் – தாஹீருக்கு இந்த நிலைமையா?

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (20:01 IST)
சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவரான இம்ரான் தாஹீர் இந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட இறக்கப்படவில்லை.

சிஎஸ்கே அணிக்காக கடந்த 4 ஆண்டுகளாக விளையாடி வரும் இம்ரான் தாஹீர் சென்ற சீசனில் அதிக விக்கெட் எடுத்ததற்காக பர்ப்பிள் கேப்பை வெற்றி பெற்றார். ஆனால் இந்த ஆண்டு அவர் இன்னமும் ஒரு போட்டியில் கூட இறக்கப்படவில்லை. அதுகூட பரவாயில்லை ஒவ்வொரு போட்டியிலும் டிரிங்ஸ் எடுத்துக்கொண்டு வந்து வீரர்களுக்குக் கொடுத்து செல்கிறார். இதனால் அவருக்கு இந்த நிலைமையா என்ற இணையத்தில் பதிவுகள் உருவாக ஆரம்பித்தன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இம்ரான் தாஹீர் ‘நான் அணியில் இருந்த போது நிறைய வீரர்கள் எனக்கு குளிர்பானம் எடுத்து வருவார்கள். இப்போது தகுதியான வீரர்கள் களத்தில் ஆடும்போது நான் ட்ரிங்க்ஸ் சுமந்து செல்கிறேன். இது என் கடமையல்லவா. நான் விளையாடுவதை விட அணியின் வெற்றியே முக்கியம். எனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போது சிறப்பாக செயல்படுவேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை: இலங்கையின் வெற்றிக்கு இந்தியா காரணமா? இது என்ன புதுசா இருக்குது..!

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுமா ஆஸ்திரேலியா?

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments